Tuesday 15 January 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா விமர்சனம்!!!







திரைகதை திலகம் கே. பாக்கியராஜ் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளி வந்த சக்கை போடு போட்ட "இன்று போய் நாளை வா"  படத்தின் கதை தான் இந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா... 


இயக்குனர் மணிகண்டன் சிறு சிறு மாற்றத்துடன் இந்த படத்தை சந்தானம்,பவர் ஸ்டார், மற்றும் சேது வை வைத்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பொங்கலன்று சுவையான லட்டை கொடுத்துள்ளார். 


படத்தின் கதை ஊருல வேலை வெட்டி எதுவும் இல்லமால் சும்மா சுத்துற மூன்று நண்பர்கள் (சிவா , கே.கே , நம்ம பவர் குமார்) , ஒரு பெண்ணை (விஷாகா) மூன்று பேரும்  தொரத்தி தொரத்தி காதலிகின்றனர். கடைசியில் யார் விஷாகா வை கை பிடித்தார் என்பதை அருமையான நகைச்சுவையுடன் வழங்கியுள்ளார்  இயக்குனர். 


மூன்று நண்பர்களின் அறிமுக காட்சி தான் டாப் அதுலயும் நம்ம பவர் ஸ்டார் இன்ட்ரொ சரியான மாஸ். திரை அரங்கில் அப்படி ஒரு அப்லாஸ்!!! பிளஸ் டூ படிக்கிற பொண்ணுக்கு பவர் ஸ்டார் நூல் விடுற காட்சியும் அந்த பொண்ணு உங்களை எங்க அப்பா கல்யாண போட்டோல பாத்திருக்கிறேன்  நீங்க அப்பாவோட நண்பர் தான என்று சொல்ல பவர் பேசி  சமாளிக்கிற காட்சி சரியான கலாய். 




சந்தானம், பவர் இருவரும் சேர்ந்து வரும் காட்சிகள் அனைத்தும் டாப். பவர் ஸ்டாரின் ஸ்க்ரீன் பிரசன்ஸே காமெடி தான். மனுஷர் டயலாக் தான் சரியாய் மேட்ச் ஆகல மத்த படி இந்த பொங்கல் நம்ம பவர் பொங்கல் தான்...

சந்தானத்துக்கு பாட்டு சொல்லி கொடுக்கும் குருவாக VTV கணேஷ் வந்து அசத்தியுள்ளார். சந்தானம் கணேஷுக்கு பாடை கட்டும் சீன் சரியான கிளாஸ்!!!  VTV கணேஷின் மனைவியாக கோவை சரளா பட்டாசு போல் பட பட வென வந்து பேசி போகிறார். சந்தானம் தன் படம் என்றதால் என்னமோ மனுஷன் ரொம்ப மெனக்கட்டு நடிச்சிருக்கிறார்.

 தமிழ் சினிமாவில் கவுன்ட்டர் அட்டாக் காமெடி சந்தானத்துக்கே உரியதாய் விட்டது. தன்னை பெரிய திரைக்கு அறிமுக படுத்திய சிம்புவுக்கு சந்தானம் மரியாதை செய்யும் நிமித்தமாக இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்துள்ளார். #நண்பன்டா 




சேது ரொம்ப அலட்டி கொள்ளாமல் நடித்து பொய் இருகிறார். விஷாகா கொடுத்த வேலையை தன்னால் முடிந்தமட்டும் செய்து இருக்கிறார்! ராதிகாவிடம் இருந்த வெகுளி தனம் விஷாகாவிடம் இல்லை. பட்ஜெட்க்கு ஏத்த மாதரி தான ஹீரோயின் கிடைக்கும். 

படத்தின் இசை அமைப்பாளர் தமன் "கண்ணா லட்டு தின்ன ஆசையா", "லவ் லெட்டெர் கொடுக்க ஆசை பட்டேன்" பாடல்களை அருமையாக தந்துள்ளார். 

கண்ணா லட்டு தின்ன ஆசையா நன்றாக ர(ரு)சித்து பாருங்கள்...



Sunday 13 January 2013

அலெக்ஸ் பாண்டியன்!!!





இந்த 2013ம் ஆண்டு  பொங்கல் ரேஸில் களத்துக்கு வந்த முதல் குதிரை அலெக்ஸ் பாண்டியன் , இந்த குதிரை 20 வருடத்திற்கு முன்னால் களத்திற்கு வந்திருந்தாலும் வெற்றி பெற்று இருப்பது  சந்தேகம் தான்.  டைரக்டர் சுராஜ் இந்த படத்தை  2011ம் ஆண்டு இறுதியில் ஆரம்பிச்சு இவ்வளவு நாள் என்ன பண்ணார்னு தெரியல.  

படம் ஆரம்பமே  அனுஷ்காவை வில்லன் கும்பல் தொரத்தி கொண்டு வருகின்றனர்  அப்ப  தான்  நம்ம சிறுத்தை கார்த்தியின் அறிமுகம்.ரயில் சண்டை காட்சியில் நம்ம விஜயின் வில்லு பட சண்டை காட்சியை இந்திய வரலாற்றில் முதன் முறையாக நம்ம டைரக்டர் சுராஜ் கட்சிதமாக முறியடித்துள்ளார்... இந்த  படத்தில் வரும் சண்டை காட்சிகள் இனி வரும் காலங்களில் தெலுங்கு படத்திற்கு முன் மாதரியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.... சந்தானம் திரையில் தோன்றியதும் திரை அரங்கமே கை தட்டலளால் அதிர்ந்தது. இனி கதை நன்றாக நகர ஆரம்பிக்கும் என்று நினைத்தால் ஒரே மாதரியான காமெடி செய்து நம்மளை வெறுப்பு எத்துகிறார் சந்தானம்....இண்டர்வல் வரைக்கும் திரை அரங்கத்தில் உள்ள எவருக்கும் கதை என்ன என்று சொல்லாமல் சஸ்பென்ஸ் வைத்து உள்ளார் நம்ம டைரக்டர். அது வரைக்கும் எதோ காமெடி சேனல்ல "வாங்க மொக்க போடலாம்" ன்னு நிகழ்ச்சி நடத்துன மாதரி இருந்தது.... ரொம்ப நம்ம  பொறுமைய சொதிச்சிடாங்க!!!



இண்டர்வலுக்கு அப்புறம் நம்ம சிறுத்தை என்று சொல்லும் கார்த்தி பிளாஷ்பக் சொல்லறார்...எதோ மாத்திரை அமெரிக்கால இருந்து நம்ம தமிழகத்துக்கு கப்பல வந்திருக்கு அத தமிழக முதல் அமைச்சராக இருக்குற நம்ம நேர்மையான விசு  சார் கையெழுத்து போட்டா தான் தமிழகத்துக்குள் கொண்டு வர முடியும்.அதானல வில்லன் இருவரும் சேர்ந்து யோசனை செய்து அதற்கு ஒரு சாமியார் இருக்கிறார் அவர் சொன்னால் நம்ம சி.எம் கேட்பார் என்று அவரிடம் செல்கின்றனர் அவரும் தனக்கு பங்கு வேண்டும் என்று கூறி நம்மால் எதிர்பார்க்க முடியாத ஒரு  திருப்பத்தை தந்துள்ளார் டைரக்டர் சுராஜ்.என்ன ஒரு ட்விஸ்ட் இதுக்கு பில்ட்ஆப் பண்ற மாதிரி ஒரு இசை வேற எனத்த சொல்லறது..



சி.எம்  மகளான  அனுஷ்காவை  கடத்த  நம்ம  கார்த்திக் உதவியை  நாடுகின்றனர். அப்புறம்  என்ன  நம்ம  அனுஷ்காக்கு  ஹீரோ மேல காதல் ஏற்பட்டு 2 பாட்டு  வருது அப்புறம் நம்ம ஹீரோ நாட்டின் மேல் உள்ள பற்றால் கிளைமாக்ஸ் ல எல்லாரையும்  அடிச்சு தும்சம்  செய்றார் .இதுல  நம்ம டைரக்டர்  காமெடி ட்ராக் கொண்டு சினிமாவில் புதிய திருபத்தை கொடுத்துள்ளார்.நம்ம சி.எம் கையெழுத்து போட 1 மணி நேரம் இருப்பதால் வில்லன் இருவரும் ஹீரோ வை கட்டி போட்டு கால் பந்தால்  உதைகின்றனர்.அப்ப நம்ம கதையின் நாயகி டேய் அவர் கை கெட்ட கழட்டி விட்டு அடிச்சு பாருங்கன்னு சொன்னதும் அடேங்கப்பா...

பிரதாப் போத்தன் சி.எம் PA வாக வந்து அவரை இறுதியில் கெட்டவராக காட்டி சினிமா வரலாற்றில் யாருமே கண்டிராத ட்விஸ்ட் தந்துள்ளார் சுராஜ்..

மொத்தத்தில் சுராஜ் தொடர்ச்சியாக 3 முறை பிளாப் கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில்  நீங்காத இடம் பிடித்து அடுத்த  வரும் தன்  படங்களுக்கு எச்சரிக்கை  விடுத்தள்ளார். சுராஜ் அண்ட் கார்த்திக் பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம்....


பரதேசி விமர்சனம்!!!

பாலாவின் பரதேசி!!! -  லாஸ்ட் ஆன் நெட் தமிழ் சினிமாவில் இது  வரை வந்த சில எதார்த்த படைப்புகளில் பாலாவின் பரதேசியும் கண்டிப்பாக இடம்...