பல வருடங்களுக்கு பிறகு நம்ம மக்கள் நாயகன் (பசு நேசன்) ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் படம் சன் டிவியில் நேற்று பார்த்து ரசித்தேன்.
கவுண்டமணி, செந்தில் இருவரும் நடித்ததில் இந்த படம் ஒரு இமயம் என்று தயங்காமல் சொல்லலாம்.
கவுண்டமணியின் ஒவ்வொரு வசனமும் நக்கலின் உச்சமாக இருக்கும்....
அடே என்ன பார்த்து ஏன்டா அந்த கேள்வியை கேட்ட??
நீ வாங்குற அஞ்சு பத்து பிட்சைக்கு இது தேவையா?
என்னடி கலர் கலர் ஆ ரீல் விடுற...
வாயில பல்லு குச்சிய வச்சிட்டு எங்க அரண்மனைக்கா போவாங்க ?
தகர டப்பால பெயிண்ட் அடிச்சு அத இவரு தட்டுனா நீங்க அப்படியே நீங்க தில்லான ஆடிருவிங்கலோ....
ஒரே ஒரு முக்கா கை பனியன் இருந்தது அதுவும் இப்படி போயிருச்சு ....
படத்தோட இன்னொரு முக்கிய அம்சம் சண்முக சுந்தரத்தின் டயலாக்..
# கரகாட்டக்காரன் # கங்கை அமரன் # இசை ஞானி #ராமராஜன் #கவுண்டமணி # செந்தில்
No comments:
Post a Comment